இந்த வாரம் வெளியேற்றப் பட்டாரா காஜல்..? முழு விபரத்துடன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைப்படி வாரம் ஒருவர் வீதம் வெளியேற வேண்டும். கடந்த வாரம் ரைசா வெளியேறினார்.
இவர் வழக்கமான முறையை விட வித்தியாசமான முறையில் கன்பஷன் ரூம் வழியாக அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், இந்த வார எவிக்ஷனுக்கு சினேகன், ஆரவ் மற்றும் சினேகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் ஆரவ், காஜல் ஆகியோர் நேரிடையாக போட்டியாளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சினேகன் கடந்த வாரமே எவிக்ஷன் லிஸ்டில் வந்து விட்டார்.
இதில் சினேகன், ஆரவ் காப்பற்றப்பட்டனர். காஜல் வெளியேற்றப்பட்டார். கடந்த 2 வாரத்திற்கு முன்புதான் காஜல் ஆரவாரமாக நுழைந்தார்.
ஏதோ செய்யப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ஓவியாவை பற்றி தவறாக பேசியதை தவிர எதனையும் செய்யவில்லை.
இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆனான காஜல் அதிர்ச்சியுடன் வெளியேறினார்.